இரங்கற் பா
இன்னுமென்ன உ ற க் க ம்!
விடிந்தது காரிருளும்
விழித்திடாயோ சீரப்பா..,
கடிந்தது யான் என்னவோ
கலங்கும் எம்மை இமைதிறந்து பாரப்பா..!
முடிந்தது நீ சென்ற பாதை - ஒரு
நொடியில் நீ பிரிந்தாய் உலகை
துடித்தது பலவுயிர் அதை தேற்ற
படித்தமேதையே இதை விழித்துபாராயோ..!
ஒடித்திரியுங்காற்றில் நீவரவே
கூடினோம் நாங்கள் கருமம்செய்ய
பாடினோம் நின்றன் திருபெயரையே
வாடினோம் இளங்காற்றாய் நீ வீசு..!
தேடினோம் உனைக் காணாததால்
வாடினோற்கு தர்ம உண்டியிட்டு
ஏணி போடுகிறேன் இறங்கி வந்து விடு
அப்பா...! அப்பா..! அப்பா..!
குறிப்பு:
சீரப்பா - புகழ்கொண்ட அப்பா 01.06.1983
Keine Kommentare:
Kommentar veröffentlichen