Mittwoch, 30. September 2009

களத்தில் நின்ற காவலர்கள்

ஆரியர் தம் சூழ்ச்சியினால் இயற்கையாகவே இளகிய மனம்
படைத்த மக்கள் மனதில் மதத்தின் பெயரால் இட்டுக்கட்டிய
புராண புளுகுமூட்டைகள் மூலம் சாதி பாகுபாடுகளை புகுத்தி அறிவை முடமாக்கியதுமல்லாது ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்தி தங்களுக்குள் வெறுத்துக்கொள்ளும் பிரித்தாளும் போக்கினை ஏற்படுத்திஅதில் குளிர் காய்கின்றனர். இதனை முதலில் இந்த சாதி, தீண்டாமைதனை எதிர்த்து குரல்
கொடுத்தவர் புத்தரே!புத்தரை வழியை பின் பற்றியோர் அனைவரும் ஆரிய பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவருக்கு பின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் களத்தில் ஆதிதிராவிடருக்காக பார்ப்பனரின் அட்டூழியங்களை பைசா தமிழன்,தமிழன் ஏடுகள் மூலம் அம்பலபடுத்திவர்
க.அயோத்தியதாசர் பண்டிதர்.அவரின் உறவினரான தாத்தா இரட்டைமலை
சீனிவாசன் இலண்டனில் நடந்த மூன்று வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேட்கருடன் கலந்து கொண்டவராவார்.இவரின் தொண்டும்
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய பணிகள்.இவர்களின் அடியையொற்றி அண்ணல் அம்பேட்கருடன் இணைந்து
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர் சட்டமன்ற உறுப்பினர்.,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னால் நகராண்மை தலைவராக,இந்திய குடிரசு கட்சியின் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் ஆவார்கள்.அவரின் 118வது பிறந்த நினைவு நாள் இன்று. தந்தையின் தொண்டை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது இதுவே தக்க தருணமாகும்.

Dienstag, 29. September 2009