Mittwoch, 14. Januar 2009

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

2040 ம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழரேதமிழரே இன்னுமென்ன உறக்கம்?
பொழுதும்புலர்ந்துவிட்டது, கதிரவனும் கண்
விழித்துகதிர் வீச முற்பட்டுவிட்டான் நீவீர்
ஆழ்ந்துஉறங்கிடும் வேளை உம்மைச் சுற்றி
என்னநடக்குதென கனவில் காணவியலாது
தமிழரேகண்விழித்துப் பார் உம் கை கால்கள்
சாதி,மதம்,சடங்கு,கணிய மூடநம்பிக்கையால்
கட்டப்பட்டுள்ளதைபார்!பார்!! கண்விழித்து பார்!
நம்மினத்தைக்காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள்,
நும்ஏமாளித்தனத்தை பயன்படுத்தி ஏத்திப்பிழைக்கும்
வேட்டுவவல்லாதிக்க எத்தர்கள் உம் தொடையில்
கயிறுதிரிப்பதைக் கண்விழித்து பார்! தமிழினத்திற்கு
முகவரிகொடுக்க மானத்தோடு தன்னுரிமையோடு வாழ
தன்னுயிர்ஈந்து ஈகத்துடன் போராடிடும்
தன்மானத்தமிழ்ச்சிகள்தமிழர்களை வழி நடத்தும்
பண்டைத்தமிழ்வீரம் ஒருங்கமைந்த மாவீரனைப் பார்!
அம்மாவீரனின்எண்ணம் ஈடேற முடக்கும் சூழ்ச்சிகளை
உடைத்திடதமிழரே நாம் அனைவரும் ஒன்றினைந்து
உலகத்தவர்க்குநம் ஞாயமான கோரிக்கைகளை
எடுத்தியம்ப,மேற்குறிப்பிட்ட எம்மீது திணிக்கப்பட்டதனை கலைந்து
பகுத்தறிவுக்கண்க்கொண்டு எம் தமிழ்ச்சான்றோர் எண்பத்தெட்டு
ஆண்டுகளுக்குமுன் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்த்தொடராண்டான
திருவள்ளுவத்தமிழ்ப் புத்தாண்டில் தமிழருக்குள் தமிழில்
உரையாடிடவும் தமிழ்ப்பெயர் சூட்டிடவும் சூளுரை ஏற்போம் வாரீர்!
பொங்கட்டும்தமிழ் உணர்வு ஓங்கட்டும் மனிதநேயம்.

இவண்
ஆம்பூர்பெ.மணியரசன்.
தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் செருமனி
thamizhankural.org