Dienstag, 14. April 2009

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.

அண்ணல் அம்பேட்கரின் பிறந்த நாளில் அவரின் கருத்துகளை நினைவு கூறுகிறோம்.
அது....
* இந்து மதத்தில் மனசான்றுக்கோ - பகுத்தறிவிக்கோ - சிந்தனைக்கோ முகாண்மை(முக்கியத்துவம்)இல்லை அல்லது வளர்ச்சிக்கும் வழியில்லை.ஓர் இந்து என்பவன் மறை(வேதங்)களுக்கு அடிமையாகவும் அல்லது ஸ்மிருதிகளுக்கு அடிமையாகவோ அல்லது மேன்மையர்(மகான்)களைப் பின்பற்றி வாழ்பவனாகவும் இருக்கவேண்டும்.
*மேல்சாதிகள் வளத்திற்கும், முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் குமுகாய(சமூக) உயர்வுக்கும் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது.
*மதம் மனிதனுக்காக, மதத்திற்காக மனிதன் அல்ல.
*இந்து மதம் குமுகாயத்தில்(சமிதாயத்தில்)தன்மானத்திற்கு இடமில்லை.இந்து மதம் சாதி வேறுபாடு(பேதம்) ஊன்ற கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.மனிதனை மனிதனாக மதிப்பதில்லை.தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு கரணியம்(காரணம்)தீண்டாமைதான்.இது சாதி இந்துக்களுக்கும். தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கின்ற போராட்டமே.இந்த போராட்டத்தில் தன்மானத்தோடு சரிசம உரிமைப்பெற்று வாழ இந்து மதத்திலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் விடுபட வேண்டும்.
*இந்த நாட்டிலுள்ள சில முகாமையான குமுகாயப் பிணக்குகள் குறிப்பாக சாதி- தீண்டாமை - குமுகாய இழிவு தீர்க்கப்படும் வரை
விடுதலை தேவையில்லை என்பது அம்பேடகரின் கருத்தாயிருந்த்து.
வெள்ளைக்காரர் ஆட்சியில் அடிமைத்தனம் என்னென்பதை பார்ப்பனர்களும் உயர்சாதி இந்துக்களும் உணர்கிறார்கள்.ஆனால் அது அவர்களுக்கு அரசியல் அடிமைத்தனம் மட்டும்தான்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ! குமுகாய - பொருளாதார அடிமைத்தனமும் பாரமாய் இருந்துக்கொண்டிருக்கிறது.1931ஆம் ஆண்டு இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இதைச் சுட்டிக்காட்டினார்.'' 200 ஆண்டுகாலம் வெள்ளையரின் ஆட்சியில்
அடிமைகளாயிருந்தற்காகப் போராடி விடுதலை கேட்கிறீர்கள், ஆனால் , 2500 ஆண்டுகளாக நாங்கள் உங்களிடம் அடிமைகளாகயிருக்கிறோமே! எங்களுக்கு எப்போது விடுதலை? என்று
கேட்டார், யாராலும் விடைக் கூறமுடியவில்லை.
உண்ண உணவின்றி அவதிவுறுபவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
சாதி வெறுப்புணர்வால் தலைகவிழ்ந்து நடப்பவனுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
குமுகாய இழவுகளைத் தோளில் சுமந்தவண்ணம் திரியும் மக்களுக்கு
அரசியல் விடுதலை ஒரு கேடா?
இன்று கூலி செய்தால்தான் இன்றே சாப்பாடு என்கிற நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
அடிப்படைத் தேவைகளில் ஒன்றைக்கூட உருப்படியாய்ப் பெறமுடியாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசியல் விடுதலை ஒரு கேடா?
இவற்றைத்தான் திரும்பத்திரும்ப அம்பேட்கர் கேட்டார்.
இந்த நாட்டிலுள்ள கடவுள் - மத - இலக்கியங்கள் - காப்பியங்கள் அனைத்தும் வேண்டும்மென்றே வேறுப்பாட்டையும் இழிவையும்
ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிக்கின்றன.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் குமூக சமத்துவத்தக்காகப் பாடுபட்டு அதை ஏற்படுத்துவதற்காகத்தான் காந்தியும், காங்கிரசும் மற்ற அரசியல் - குமூக நிறுவனங்களும் பாடுபட வேண்டுமேயொழிய, வெறும் அரசியல் விடுதலைக்காக மட்டும் போராடுவது பொருத்தமாகாது என்று கூறினார்.பார்ப்பனர்களுக்கும், உயர்சாதிக்கார்ரகளுக்கும்தான் விடுதலை இந்தியாவில் வாழ்விருக்கும். அவர்களின் தன்னல வேட்டைக்காடாக இந்த நாடு மாற்றப்பட்டு விடும் என்று எச்சரித்தார்.
எனவே, குமூக சமத்துவத்தை ஏற்படுத்தினால்தான் அரசியல் விடுதலையில் பொருளுண்டு என்று அம்பேட்கர் கூறினார்.
சாதியை ஒழித்த பிறகே வேறு எந்தப் புரட்சியையும் இங்கு உருவாக்க முடியும் என்று கூறினார்.
அரசியல் விடுதலையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றார்.
விடுதலைக்குப்பின் ஆட்சி பார்ப்பன - சாதி இந்துக்களின் கைக்கு மாறும், தாழ்த்தப்பட்ட மக்களின் பிணக்குகள் மேலும் மோசமாகும் என்றார்.
விடுதலை இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிமை வாழ்வே தொடரும் என்றார்.
இந்த வகையில், அம்பேட்கர் கூறிய அனைத்துமே உண்மையென
உணரப்பட்டு வருவதோடு, இப்பிணக்குகள் மேலும் அதிகமாகி, தாழ்த்தப்பட்ட மக்கட் குமுகாயமே நசிந்து போய்விடுமோ! என்ற அச்சமும் அதிகமாகி வருகிறதை நாம் கண்க்கூடாக காணுகிறோம்.
அம்பேட்கர் தன் வாழ்நாளில் ஈடுபட்ட மிக முகாமையான பணிகளில் ஒன்று தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டதைப பெற்று தருவது.
கோயிலுக்குள் போக்கஃ கூடாதவர் என்று ஒரு சாராரை வைத்துக்கொண்டு ' கோயில் புனிதமானது ' என்று கூறுவது அயோக்கியத்தனமான கூற்று என்றார்.கோயிலைக் கட்டிவர்களையே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் சாதிய இந்துகளை கடுமையாக
சாடினார்.இதற்காக 1930ஆம் ஆண்டே நாசிக்கில் போராடினார்.தமிழ் நாட்டில் கோயில் நுழைவு உரிமைக்காக முதன் முதலில் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் இறங்கிய குமிகம் சாணார்(நாடார்) குமுகமாகும்.தனித்து நின்று போராடியே இவ்வுரிமையை அவர்கள் வென்றார்கள்.1916க்கிப் பின் நீதிக் கட்சியினர்பலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில்
நுழைவு உரிமை பற்றிப் பேசலானார்கள்.பின்னாளில் பெரியாரின் குரலெழிப்பியுள்ளார்.
இன்றுவரையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோயில் நுழைவு உரிமை இல்லை.
என் வலைத் தளம் காண....,
thamizhankural.org