Donnerstag, 25. Dezember 2008

நினைவு நாள்


எனை ஈன்ற எந்தை கே.பெருமாள்
அவர்களின் தந்தை ஆம்பூர் குப்புச்சாமி
இந்து மத குமுகாயக்கேட்டால் ஒடுக்கப்பட்ட
தமிழ் மக்களை விழிப்புர தொடக்கத்தில்
பைசா தமிழன் பின்பு தமிழன் ஏட்டின் மூலம்(1913)
௧௯௧௩ வரை பண்டிதர் க.அயோத்திதாசர் பாடாற்றினார்.
அவருக்கு பின் கோலார் தங்கவயலில் பண்டிதமணி
ஜி.அப்பாதுரையார் தொடர்ந்து நடத்தினார்.அந்த ஏட்டினை
என் தந்தைக்கு வாங்கி கொடுத்து படிக்கச் செய்து பிற்காலத்தில்
ஆதி திராவிடர் எழுச்சிக்கு பாடாற்ற வழிவகுத்த பாட்டனாரின்
46ம் நினைவு நாள் இன்று.