Donnerstag, 25. Dezember 2008

நினைவு நாள்


எனை ஈன்ற எந்தை கே.பெருமாள்
அவர்களின் தந்தை ஆம்பூர் குப்புச்சாமி
இந்து மத குமுகாயக்கேட்டால் ஒடுக்கப்பட்ட
தமிழ் மக்களை விழிப்புர தொடக்கத்தில்
பைசா தமிழன் பின்பு தமிழன் ஏட்டின் மூலம்(1913)
௧௯௧௩ வரை பண்டிதர் க.அயோத்திதாசர் பாடாற்றினார்.
அவருக்கு பின் கோலார் தங்கவயலில் பண்டிதமணி
ஜி.அப்பாதுரையார் தொடர்ந்து நடத்தினார்.அந்த ஏட்டினை
என் தந்தைக்கு வாங்கி கொடுத்து படிக்கச் செய்து பிற்காலத்தில்
ஆதி திராவிடர் எழுச்சிக்கு பாடாற்ற வழிவகுத்த பாட்டனாரின்
46ம் நினைவு நாள் இன்று.

Freitag, 19. Dezember 2008

தங்கவயல் பாடல்

தங்கவயல் பாடல்
நாட்டுப்புறப் பாடல் மெட்டு
இயக்குநர் : கொ.உலோகநாதன்
வந்தனம் வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம் தானங்க
வந்திருக்கும் நீங்க ளெல்லாம்
பாட்டக் கேளுங்க
எங்க ஊறு எங்க ஊறு
தங்கவயலுங்க - இந்த
தங்கவயல் உலோகநாதன்
பாட்டக் கேளுங்க
(வந்தனம்)
பொன்னு வெளஞ்சதெல்லாம்
தங்கவயல் நிலத்தில் தானுங்க
நாட்டுக்கு தங்கத்தைக் கொடுத்ததெல்லாம்
பாட்டாளிதாங்க உழைத்த பாட்டாளிதாங்க
தங்கச்சுரங்கம் ஆரம்பித்தவர்
ஜாண்டைலர் குழுமம்தானுங்க
அது 1880ல் தொடங்கப்பட்டதுங்க
உலகத்திலே புகழடைந்த தங்கவயலுங்க
அதில் 35,000 ஆயிரம் தொழிலாளர் பாடுபட்டாங்க
தங்கச் சுரங்கத்தில் உயிரைவிட்டு
மாண்டவர்கள் எத்தனைப்பேருங்க - முடிவில்
10,000 ஆயிரம் தொழிலாளர்
உயிரை விட்டாங்க
தங்கச்சுரங்கம் நடத்திவந்தது இன்றும்தானங்க
120 ஆண்டுகாலம் ஆகிவிட்டதுங்க
முடிவான 3,200 தொழிலாளர்தானங்க
முடிவில் 2001 லேதான் மூடிவிட்டாங்க
பாட்டாளி படும் அல்லல்கள்
பல கோடிதானங்க - அந்த
பாராளுமன்றம் மன்சுவைச்சா
எல்லாம் கூடுமுங்க.
( வந்தனம்)
இப்பாடலை இயற்றிப் பாடியவர் கவி ,இசைமுரசு
கொ.உலோகநாதன்
தங்கவயல்

Dienstag, 18. November 2008

இந்து வல்லான்மைக்குஎதிரக்குரல் எழுப்பிய முதல் தமிழன்

தமிழன் ஏடு ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்
தமிழன் ஏட்டை தொடர்ந்து நடத்திய பண்டிதமணி ஜி.அப்பாதுரையாஃ

திருவாட்டி.இலட்சிமி பெருமாள்

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் தாயார்
0௩.௧௧.௨00௮ ம் ஆண்டில் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று
தங்கவயல் விடிவெள்ளி
பண்டிதர் க.அயோத்திதாசர்,பண்டிதமணி அப்பாதுரையார்,
இரட்டைமலை சீனிவாசன்,என்.சிவராஜ்,அண்ணல் அம்பேட்கர் கொள்கைகளை தன் குரல்வள பேச்சால்
தங்கவயல் மக்களின் மனத்தில் வேருண்றச் செய்த
தன்னலமற்ற பதவிகளை துறந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களின் விடிவுக்காக குரல் எழுப்பிய தலைவர்
கே.பெருமாள் அவர்கள்
.
பண்டிதர் அயோத்தியதாசரின்’’ தமிழன்’’ ஏட்டை 1914 முதல் நடத்திய
பண்டிதமணி ஜி.அப்பாதுரையார்
அருளறம் உரைத்த அந்தணன் வாழி
முகவுரை
பண்டிட் ஜவர்லால் நேரு இந்திய இந்திய நாட்டின் பிரதராயிருந்தப்போது நாடெங்குமுள்ள பௌத்த சங்கங்களுக்கு நிதிவுதவி அளித்து பகவன் புத்தரின் 2500 ம் ஆண்டு ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற முடிவை அறிவித்தார். அதுபோது தங்கவயல் தென்னிந்திய பௌத்த சங்கங்களின் சார்பில் நடைப்பெற்ற விழாவின் போது பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை மக்களுக்கு பயன்படும்வகையில் புத்தமாக வெளியிட வேண்டுமென்ற பேராவலினால் இம்முயற்சினை மேற்கொண்டுள்ளோம். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்தமார்க்கத்தை தழுவியப்போது அவருடன் லட்சக்கணக்கான மக்கள் சரணடைந்து பௌத்தத்திற்கு மறுமலர்ச்சி உண்டாக்கினர்.அப்புனித மார்க்கத்தை ஏற்று அண்ணலின் வழியை பின்பற்ற துடிக்கும் மக்களுக்கு இச்சிறு நூல் பயன்படும் என்ற நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது. எனவே சமுதாய மாற்றத்தை, மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன்.
கே.பெருமாள்
தலைவர்
அம்பேத்கர் நினைவு நிதிக்குழுவினர்
பெங்களூர்-5
தங்கவயல் “ ஆசிரியர் நாவலர் தென்னிந்திய பௌத்த சங்கத் தலைவர் பண்டிதமணி ஜி.அப்பாதுரையார் அவர்கள் பகவன் புத்தரின் 2500ம் ஆண்டு விழாவின்போது ஆற்றிய சொற்பொழிவு.
அருளறம் உரைத்த அறவாழி அந்தணன்
அறவாழி அந்தணனாம் சாக்கிய புத்தரின்,
2500ம் ஆண்டின் திருவிழா, இவ்வாண்டு, இத்திங்கள் முழுமதி நிறைந்த, இந்நாளில் தொடங்கப்பட்டிருக்கிறது. அறிச்சான்ற உலகமக்கள், பலரும் இத்திருவிழாவில் கலந்துக்கொண்டு மகிழ்ச்சியடைவார்கள் என்பதற்குறிய அறிக்குறிகள் எங்கும் காணப்படுகின்றன. எண்பது கோடி மக்களை இடமாக கொண்ட பௌத்த உலகம் , புண்ணிய முதல்வனின் தண்ணிய அருளறத்தையுன்னி, ஆர்வப்பெருங்கடலில் ஆழ்ந்து நிற்கும் அடிமைத்தளை நீங்கி ஆட்சி நலம் பெற்ற நமது இந்திய மக்களும் அரசமர் செல்வனின் அரும்பெரும் விழாவைச் சிறப்புடன் ஆற்றி சீர்பெறெ வேண்டுமென்று , மக்கள் ஆட்சி மன்றத்தின் துணை இன்னொலியாக இந்தியாவெங்கும் இயங்கிகொண்டிருக்கிறது .
போதி விழாவென்னும் , இப்பெருவிழா இந்தியாவெங்கிலுமினிது நிறைவேற வேண்டுமென்னும் நன்னோக்கத்துடன் அறிஞர் , பேரவை ஒன்றை நிறுவி பெருநிதியையும் தந்துதவிய நமது இந்திய பாராளுமன்றத்தார்க்கு பௌத்த உலகம் என்றும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறது.
வாள் வலிமையும் , ஆட்சியின் ஆற்றலும் ,சேனைத்திரளும் துணைக்கொண்டு சிலமதங்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. . ஒரு துளியிரத்தமும் உலகிற் சிந்தாமலும் ஒருவரையும்
துன்புறுத்தாமலும் உலகிற் பரவிய மார்க்கமொன்றிருக்கிறதென்றால் அது பௌத்த மார்க்கம் என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ ,முடியாதென்பதை வரலாற்று நூல்கள் வற்புறுத்துகின்றன.
வகுப்பு வேற்றுமையும், நாட்டுப்பூசலையும் அடிப்படையாகக்கொண்டே சில மதங்கள் தோன்றியிருக்கின்றன்.அவற்றின் வரலாற்றின்கண் அவ்வவ்வகுப்புக்கும் , நாட்டுக்கும் ,ஆதரவும் பெருமையும் காட்டப்பெற்று மற்றையோரைக் கீழ்மைபடுத்தியுள்ளதை நன்கு காணலாம் .அவ்வித வேற்றுமையுணர்ச்சிக்கோ ,தற்பெருமைக்கோ பௌத்தத்திற் சிறிதும் இடமில்லை.
ஒருகாலத்தில் கௌண்டிணியரைத் தலைமையாகக் கொண்ட கடுந்தசிகள் ஐவருடன் சித்தார்த்தரும் சேர்ந்திருந்து, கடுந்தவத்தை மேற்கொண்டார்.
பிறகு உடலை வருத்துங்கடுந்தவத்தால் உண்மை ஞானத்தைக் காண்டலரிது என அதனை விடுத்து ,ஒழுக்கத்தினால் ஏற்படும் உள்ளத்தூய்மையின் உயர்ந்த ஞான எல்லையாம் மற்றற்ற போதி நிலையைச் சித்தார்த்தர் அடைந்தபின் மக்கட்கு துக்க நிவாரண மார்க்கத்தை விளக்க்ப் புறப்பட்டார் .வழியில் பழைய
தோழர்களாகிய தவசிகளை கண்டார்.அவர்களருகே புத்தர் நெருங்கியபோது அவரை வரவேற்று உபசரித்த அத்தவசிகள் அவரது குடும்பப்பெயரை பெருமைப்படுத்த நினைத்து கௌதமரே என்று அழைத்தார்கள். அப்போது புத்தர் எனது குடும்பப்பெயரைப் பெருமை படுத்த நினைத்து என்னை கௌதமரே என்று அழைக்காதீர்கள் மக்களாய் பிறந்தோருள் உயர்வு ,தாழ்வு கற்பிக்கும் வேற்றுமையுணர்ச்சிக்கு யான் உட்பட்டவன் அல்லன்.மன்பதை யாவும் ஒன்றெனெக்கருதி அருளறத்தை மேற்கொள்ளும் ஒருவரை உயர்வும், தாழ்வும், மேன்மையும் ,கீழ்மையும் கற்பிக்கக்கூடிய குடும்பப்பெயரலாவது, குலப்பெயரலாவது அழைத்தல் தகுதியுடைத்தன்று. எவ்வுரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பரந்த உள்ளத்தவராய் சிறந்து விளங்கும்வீர்களாக என்று கூறித் தனது முதற் பிரங்கமாகிய , தர்மச் சக்கர பிரவ்ர்த்தனமெனும், அறவாழியை அவர்களுக்கு விளங்குபடியுரைத்தார். இதை திரிபிடகத்தில் தர்ம சக்கரபிரவர்த்தன சூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது . இவ்விடத்தில்தான் அசோக சக்கரவர்த்தி “ கற்றூணை எழுப்பி புத்தர் போதித்த தர்ம சக்கரமாகிய அறவாழியை சித்தரித்திருக்கிறார்.
நமது இந்திய ஜனநாயக் ஆட்சியின் மணிக்கொடியில் அமைக்கப்பட்டு இலங்குவது ஆட்சியின் சின்னமாக முத்துரையிடப்பட்டு வருவதும், இவ்வறவாழியாம் தர்மசக்கரம் என்பதையும் நாம் அறிந்து ஒழுக வேண்டும். இதுபற்றியே,
”ஆதி முதல்வன் அறவாழியாள்வோன்
அறக்கதிராழி திறம்ப்வுருட்டிக்
மறகடந்த வாமன்”
என்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. பிறவிப்பிணி மருத்துவன் எனப்போற்றப்படும் இப்பெருமகன் கய்லைம்பதி அடுத்துள்ள உலும்பிணி சோலையின்கண், பிறந்தார் என்று அசோக சக்கரவர்த்தியால் ஒரு கற்றூண் எழுப்பப்பட்டு,
உலகொளியாம் புத்தரென்னும்
ஞான மூர்த்தி பிறந்த்விடம் , என எழுதப்பட்டிருப்பதை இன்றுங்காணலாம் .இவர் தோன்றியபோது
விந்தியமலைக்கு வடதிசை கங்காநதியின் இரு அருங்கிலும் சந்நியாசிகளைத் தலைமையாகக் கொண்ட வேத வேள்வி மார்க்கம் பரவியிருந்தது. இரத்தம் தோய்ந்து நிரம்பிய பலி பீடங்கள், குருக்களின் இருக்கையாக காணப் பட்டன.
மக்கள் மூடநம்பிக்கையால், மடமையும், வறுமையுமாகிய இருளால் சூழப்பட்டிருந்தனர். அதுகாலை அறிவுச் சுடர் பரப்பி அறியாமை இருளைப்போக்கும் இள ஞாயிறு போல் புத்தர் தோன்றி , மெய்யொளியைப் பரப்பினார். இக்கருத்து விளங்குபடி மணிமேகலையில் ,
’’ உயிர்களெல்லாம் உணர்வு பாழாகிப்
பொருள் வழங்கும் செவித்துளை தூர்ந்தறிவிழந்த
அறந்தலையுலகத்து அரும்பாடு சிறக்கச்
சுடர்வழக்கற்றுத் தருமாறு காலையோர்
இளவல் ஞாயிறு தோன்றிதென்ன?
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன். ’’
எனக் கூறியிருத்தல் ஊன்றிகவனிக்கத்தக்கதாம். இம்மாபெரும்
முதல்வன் , உலகியல் அறிந்து அருளறம் பரப்பி வருங்காலத்தில் சிராவஸ்தி நகரை அடுத்த ஆலவி புரத்தில் அறவுரை போதித்துக்கொண்டிருந்தபோது , ஆலவிபுர வாசியான ஒரு ஏழை குடியானவன் காணாமற்போனதன் எருதைத்தேடி பிடிப்பதற்காக
காலையில் புறப்பட்டு பலதிசைகளிலும் தேடியலைந்து எருதைக் கண்டுபிடித்து மந்தையில் சேர்த்துவிட்டு களைப்பும் , பசியும் மிகுந்திருந்தும் , வீட்டுக்குச் சென்றால் அறவுறரைக் கேட்கத்தவறிப்போம் என்றெண்ணியவனாய் விரைந்தோடி வந்து ,
கூட்டத்தில் நுழைந்து முன்சென்று , புத்தர் அமர்ந்து இருக்குக் பீடத்திற்கு ஒருபுறமாய் அமர்ந்தான். களைப்பினால் சோர்வடைந்திருந்த அவன் முகத்தைப் பார்த்த புத்தர் , அவன் களைப்பினால் சோர்வடைந்திருக்கும் காரணத்தை விசாரித்தறிந்துக் கொண்டு , அறச்சாலையை கவணிப்பவரை அவவேழை குடியானவன் பசியாறும்படி உணவளிக்க சொன்னார். அவன் உண்டு பசி தணிந்து , கூட்டத்திற்கு வந்தபின், தமது அறவுரையை கூறி முடித்தார், என்று பேசிக்கொண்டார்கள்.
அவர்களது உணர்ச்சியின் போக்கைக்கண்ட பகவன் ‘’ ஜிகச்சா பரம ரோகர் ‘’ என்ற வாக்கியத்தை சொல்லி , பசிப்பிணி மிக கொடியது , பசியினால் துன்பப்படும் ஒருவன் அறவுரைகளைச் சரிவரக் கவணிக்கமாட்டான்.ஒருக்கால் அவனுக்கு அது துன்பமாக காணப்படும்.அந்நிலையில்நாம் அவனை வருத்தியவர்களாவோம்.
ஆகலின் பசிப்பிணியாற்றுவதே நமது அருளறத்திற்குரிய கடமையாகக் கொள்ள வேண்டுமென விளக்கினார்.
இங்ஙனம் பௌத்தம் கடுமையான பட்டினி விரதங்களை
அறவே நீக்கிவிடுவதால் , பிற மார்க்கத்தினர் , பௌத்தர்களை புஷ்டி மார்க்கத்தை பாராட்டுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றவர்கள் என்று இகழ்ந்து கூறுகின்றனர். உணவால் உடம்பும் , உடம்பால் உயிரும் உயிரால் உணர்வும் தொடர்ந்து இயங்குவதாலிவற்றை ஒன்றினின்று ஒன்றை அறவே நீக்கி உண்மை காண்டலரிதென பௌத்தம் மறுத்துக்கூறுகிறது. அன்றியும் நல்லுணர்வு தோன்றுவதற்கும் , ஆகலின் , உடல் நலத்திற்கேற்ற நல்லுணவை , இயல்பான அளவு உட்கொண்டு ,உணர்வின் தூய்மையைப் பெருக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் . ஆதலால் பட்டினிவிரதங்களால் உடலை வருத்திக் கொண்டு , உடல்நிலையைக்கெடுத்துக் கொள்ளுதலுமாகிய இருவித அளவுகடந்த செயல்களையும் அறவே நீக்கி , இயல்பான நடுவு நிலைமையில் நின்று பொருந்திய அளவு நுகர்ந்து இன்புற வேண்டுமென்பதே பௌத்தத்தின் நோக்கமாம் . உடையின்றி திரிதலும், மொட்டை அடித்தலும் ,ஜடை தரித்தலும் , நாகரீகமற்ற ஆடையை உடுத்திக்கொள்ளுதலும் , பலி கொடுத்தலும் ,கடினமாய் தூங்காதிருத்தலும் , அக்னிக்குப் பலியிடுதலும், குற்றமுள்ள எண்ணங்கள் நினைந்தவனை , சிறிதும் தூய்மைபடுத்தாவாம். வேதத்தை ஓதுதலும் , தரையிற் படுத்தலும், நன்னெறியிற் செல்லாதவளை தூய்மைபடுத்தாவாம்.
எல்லாச் செயல்களுக்கும் மனச்செயலே ஆதாரம். அளவு கடந்து
நெடுநாள் வரைக்கும் எவ்விதமான கடின தவங்களையும் உடல் நலியும்படிபழகினாலும், மனதை நேர்மையான வழியிற்செலுத்தும்
ஆற்றலில்லாவிட்டால் ஒன்றும் பயன்படாது. ’’ சித்த தீனம் தர்ம
தீனம்போதி’’என்றபடி சத்தர்மத்தில் வழக்கம் மனதைச்சார்ந்திருக்கிறது ஆதலின் ஒவ்வொருவரும் தத்தம் மனதை நடு நிலைமையான வழியில் நிலைக்கச் செய்தலே பழுதிலா வாழ்க்கைக்கேதுவாம்.
ஒரு காலத்தில் பகவன் புத்தர் மகா நாமன் என்னும் அரசனையும் பார்த்து அரசனே! மனிதன் மிகுந்த சுகத்தையே அளவுகடந்து அநுபவிக்க வேண்டுமென்ற வேட்கையில் சிக்கினால் சொற்ப துக்கமும் பெருந்துக்கமாகவே துன்புறுத்தும்.
சுகத்தை மிகுதியாக விரும்பாதவிடத்தே பெருந்துக்கமென்று கருதப்படுவதும் சொற்ப துக்கமாகவே தோன்றும். சுகத்திற்கும் , துக்கத்திற்கும் நம்முடைய மனமும் , செயலுமே காரணமாகும்.
பகையைப்பெருக்கி கொள்கிறவர்களும் நாமே , ஆகையால் புறப்பகைவரிடம் வெற்றிக்கொள்ளும் வீரனைவிட நமக்குள் இருக்கும் அகப்பகைவர்களாம் காம , வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களை வெனறவனே சுத்தவீரனாவான் எனக்கூறியுள்ளார். பசியும் , பிணியும் , பகைமையும் நீங்கிய சமத்துவ வாழ்க்கையே சமூக நல்வாழ்க்கை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பசிப்பிணி நீங்கும் பண்பிற்கு ஏதுவாய் ஈகை என்னும் அறிச்சுரந்த அன்பு சமூகத்தில் பரவ வேண்டும்.
இதுபற்றியே ’’ தானம் , சீலம் , பிரக்ஞா ,பாவணா ’’
சூத்திரத்தின்படி தானத்தை முன் வைத்து சீலத்தை அதற்கடுத்தபடியாக கூறப்பட்டிருக்கிறது. தானத்தின் நோக்கம் செல்வர்களை எல்லாருடைய சமத்துவத்தை வளர்க்கச் செய்தலுக்கும் ஏழைகளை நன்னெறியில் செலுத்துவதற்கும் , துணைதரும் பொருட்டேயாம். வருமானத்திற்குரிய ஊதியத்தின் ஆதாரங்களை மக்கள் சமுதாயத்தில் பரவச்செய்தல் அவர்களுடைய உடல் நலத்தைப்பெரிதும் வளர்க்கக்கூடியெதாகவும் இருப்பதுடன் அவ்விதம் எல்லாருடைய
நன்மைக்காகவும் பாடுபடுவதில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் பண்பாட்டை விருத்திச் செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆகலின் பசித்தோர் யாவராயினும் அவர்பசிப்பிணியைப் போக்கவேண்டியதே முதற்கடமையாக அருளறத்திலே விளக்கப்பட்டிருக்கிறது. மக்கள் சமுதாயத்தில் பசிப்பிணிக்கு இடமில்லாத வாழ்க்கை ஏற்படுமானால் உலகத்தில் காணப்படும் பல கொடிய குற்றங்கள் தோன்றுதற்கு ஏதுவில்லாமற் போகும்.
’’ மண்டினிஞாலத்து வாழ்வோர்க்
கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே , பசிப்பிணி
யென்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல்லளவைக்கு என்னா நிமிராது ’’
என அழகுற கூறியிருக்கும் ஆன்றோரின் அருமருந்து மக்கள் சமுதாயத்தில்திளைத்துபசிப்பிணிஒழிதற்காகஊக்கங்கொள்வோ
மென்ற உறுதி உள்ளத்திற் கொண்டு இந்த 2500 ம் ஆண்டின் பிறவிப்பிணி மருத்துவனாம், போதிச் செல்வனின்திருவிழாவைப் பெருவிழாவகக் கொண்டாடுவோமாக.
’’ புத்தங் சரணங்கச்சாமி
தர்மங் சரணங்ச் சாமி
சங்கம் சரணங்கச்சாமி ’’

Donnerstag, 13. November 2008

கோடையிடி கே.பெருமாள்

கோடையிடி கே.பெருமாள்
தங்கவயல்முன்னாள் குடியரசுக்கட்சி பேச்சாளர் மற்றும் தி.மு.க தலைவர் க.மணிமேகலன்
குண நலத்தங்கம்!குன்றாஅறிவொளிமன்றம்! !இனகுணத்தலைவன்!!!அயராதுழைப்பதிலே முதல்வன், பணமிருப்பின் நாளைய செலவிற்கு நமக்கு வேண்டுமே என கிஞ்சித்தும் எண்ணாதவர்.கவலையே கொள்ளாதவர், கருணையின் திடல்,காருண்யக்கடல்பொருணையின் நீள் திடல். பொல்லாங்கு புரிவோர்க்கும்,அவர் நாண உதவிகள் புரிந்து பெரும் மகிழ்வு கொண்டவர்.அதிலே பேரின்பம் கண்டவர்.
இளையோராயினும் பெரியோராயினும் இன்முகத்தோடு
புன்சிரிப்போடு பேசுவதிலே.கனிவுரும் பார்வை வீசுவதிலே வல்லவர்.மிகமிக நல்லவர். நுண்ணிய செயலிலும் தன் கண்ணியத்தை இழக்காத புண்ணிய சீலர்! சீர்மிகு ஞால மூலர்.
சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்போல், சுயநல மஞ்சத்தில் சாயாதவர். நுனிப்புல் மேயாதவர்.அட்க்கரும்பை சுவைத்து இரும்பூதெய்தவர்.
பகிர்ந்தளிப்பதிலே பரவச கானம் பொழிந்தவர்.பிறர் மனம் புண்படாத அளவிற்கு மென்மொழி பேசிடும் பண்பட்ட மனிதர்.மரியாதைக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திடும் மகத்தான மாண்மிகு மனிதர்.உரிமைதனை விட்டுக்கொடுக்காத வெண்கல உள்ளத்தோன்.வைரவுரமேறிய அரக்கு மாளிகை, இரக்கத்தின் மேல்மாடம், ஈகையின் ஞானப்பீடம்.
அன்புடனே முகமலர்ந்து உப்பில்லா கூழ் கொடுத்தாலும்
உண்பதிற்கோர் அமிர்தமாம் எனும் பாகுமொழி விளங்க வசதியற்றோர் வருமையில் உழன்றோர் ஏழை எளியோர் எவராயினும் , வாஞ்சையோடு,நெஞ்சுகந்து, பழங்கஞ்சியே கொடுப்பினும் சரியே,உரிமை உணர்வோடு,பெருமை பாங்கோடு, உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தார் எனும் உவகை பூக்கும், உள்ளம் மணக்கும், உத்தம குணமிக்கவர்.
தோல்வியை கண்டு துவளாதவர்.வெற்றியைக் கண்டு வெறிக்கொள்ளாதவர்.ஆயினும், எங்கும் எதிலும் அண்ணாரை தோல்வி தொட்டதேயில்லை.வெற்றிக்கனியை விட்டதேயில்லை.
சளைக்காத சீராளர் விளையாட்டிலும் பேராளர்
இங்கிலாந்து நாட்டு(John Tailor & Sons)தென்னிந்தியா கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டம் தங்கச்சுரங்கத்தை விக்டரிஸ்போர்ட்ஸ் கிளப்(Victory Sports Club)வெற்றி விளையாட்டு நிலையத்தின் செயலாளராக, இடைவிடாது பன்னெடுங்காலமாக தொடர்ந்து பதவியேற்று பல்வேறு போட்டிகளில் ஈடுப்பட்டு, மிகுந்து பாடுப்பட்டு,விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து ஊக்குவித்து, வெள்ளிப்பதக்கங்கள், தங்கமுலாம் புசப்பட்ட
கோப்பைகள், வெற்றி கேடயங்கள், நற்சான்று பத்திரங்களை,
ஆங்கிலேய நடுவர்கள் மூலமாக தலைவர் பெருமாள் பெற்றுத்
தந்தார்கள்.

ஆங்கிலேயர்களால் பாராட்டப்பட்டவர் நமது பெருமைக்குரிய அருமை தலைவர் கே.பெருமாள் அவர்கள்.
மைசூர்மைன்ஸ்(Mysore Mines),சாம்பியன் ரீப்ஸ்(Champion Reefs),உரிகம் மைன்ஸ்(Oorgaum Mines),கோரமண்டல், மற்றும் பாலக்காடு ஆகிய ஐந்து பகுதிகளின் இன்டர்மைன்ஸ் ஸ்போர்ட்ஸ்(Intermines Sports) ஜிம்கானா விளையாட்டரங்கத்தில்
(தற்போது டாக்டர் அம்பேத்கர் ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது) நடைப்பெறும்போதெல்லாம் பங்குப்பற்றி வாகைச்சூடியவர்,வெற்றிப்பண்பாடியவர்.
அதன்பயனாக ஆங்கிலேய அதிகாரிகளிடம் தனக்கேவுரித்தான தகுதி திறமையோடு சிபாரிசு மூலமாக பலருக்கு சுரங்கத்தில் வேலை வாய்ப்பை வாங்கி தந்ததோடு அவர்தம் வாழ்வை செம்மை படுத்தியவர்,நல்லதொரு குடும்பமாக, பல்கலைக்கழகமாக, பழத்தோட்டமாக,அறிவை மணக்கச்செய்தவர்.அன்பை இனிக்கச்செய்தவர்.

ஐவர் பூப்பந்தாட்டம் Badminton Fiver


ஐயா கே.பெருமாள் அவர்களும் ஒரு தலைச்சிறந்த விளையாட்டு வீரரே.பூபந்தாட்ட ஐவர் குழுவிலே மைய ஆட்டக்காரராக ஆடுவார்.
பிண்மிக்கத்தக்க வகையில் புதரிலிந்ருது புறப்பட்டு பாயும் புலியென வில்லிலிருந்து விடுப்பட்ட கணையென தலைவர் மட்டையில் அடிப்பட்ட பந்தின் வேகத்துற்கு , விரைவிற்கு நேரமோ,நாழிகையோ,
மணித்துளியோ கணிக்கவே இயலாது.
கண்ணிமை அசைவிலே நெட்டை நெக்குறச் செய்திடும், எதிர் அணியினரை திக்குமுக்காடச்செய்யும்.
அவர்தம் கனத்தயடியூடாக(Heavyshot)செலுத்தும் ப்தினை தடுத்து எடுத்திடயியலாது.பந்தை பணிப்பதிலும்(Serve) ஒரு தனிநளினமயம் எதிரணிக்கோ ஏமாற்றுமயம்.
பெங்களூர் 515 இ.எம்.இ. அடிப்படை பணிமனையில்(E.M.E.Basic Workshop)பணியாற்றியப்போது எம்.ஏ.அமலோற்பவம் பி.ஏ. அவர்களிடம் நெருங்கி பழகி நட்புடன் இருதார்கள். பழங்குடி கிருத்துவர்,பட்டதாரி, தங்கவயல்வாசி,உரிகம் தொழிற்சங்கத் தலைவர்,ஆங்கிலப் புலமைமிக்கவர்.கோலார் கல்லூரி மாணவர்கள் ஆண்டுவிழாவில் ஒரேமேடையில் அறிஞர் அண்ணாவும் அணுகுண்டு அமலோற்பவமும்
ஒன்றாக பேசினார்கள்.மிகமிக நன்றாக சொற்களை வீசினார்கள்.
துளசி மணம் வீசும் தமிழ் இலக்கியம் அலசப்பட்டது. பல்கிப்பெருகும் அறிவியல் ஆங்கிலமும் ஆய்வுக்கண்டது.அருதமிழிலே,
அழகுநடையிலே,அடுக்குத்தொடரிலே அறிஞர் அண்ணா சொல்மாரி பொழிந்தார்கள்.ஆங்கிலமொழிலே பாங்குரும்வகையிலே எதுகைமோனையிலே அணுகுண்டு அமலோற்பவம் இடிமுழக்கமிட்டார்கள்.மணிமணியாக அணிவகுத்து வந்த ஆங்கிலப்பேச்சினை கேட்ட அறிஞர் அண்ணாவே வியந்து பாராட்டினார்கள்.


அத்தகைய ஆங்கிலத்தின் மெத்த மேதையான திரு.அமலோற்பவம் அவர்களை அப்போதைய கன்னடியர் தலைவர்களாகவும் பிறகு கர்நாடக மாநில அமைச்சர்களாகவும் திகழ்ந்திட்ட மாண்புமிகு B.பசவலிங்கப்பா B.A.B.L மாண்புமிகு N.இராச்சையா ஆகியோர்களிடம் நமது தலைவர் கே.பெருமாள் அறிமுகப்படுத்தியதின் பயனாக திருமிகு M.A.அமலோற்பவம் BA அவர்கள் எத்தியோப்பிய நாடு செல்ல ஏற்பாடாகியது.அந்நாட்டு மக்களுக்கு ஆங்கிலத்தை பய்ற்றுவிக்கவும் அப்பழுக்கின்றி தேர்ச்சிப்பெறவும், சொற்பெருக்காற்றவும் ஓர் இந்தியர் அம்லோற்பவம் கடல் கடந்த நாடாம் எத்தியோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டார் என்றால் அத்தகைதோர் ஏற்றத்திற்கு ஏற்பாட்டாளர்தான்
கேன்மைமிகு கே.பெருமாள். அதன்பிறகு திரு.அமலோற்பவம் கர்நாடக
மாநில சட்டப்பேரவை உருப்பினராகவும் மாநில உணவுத்துறை தலைவராகவும்(Food Corporation Chairman)தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை
குறிப்பிட்டாகவேண்டும்
வருணாசிரத்தின் வைரியாக,நெறிக்கெட்ட வெறியர்களின் விலா எலும்பை பிளக்கும் இரும்பை கோடாலியாக,
தீண்டாமை கொடுமையை துண்டாடும் கூர்வாளாக, போர்பரணி பாடியவர்தான் கெழுமைக்குறிய கே.பெருமாள்.
அமெரிக்க நாட்டு கொலம்பியா பல்கலைக்கழகம், இங்கிலாந்து நாட்டின் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் ஜெர்மனியின் பொண் பல்கலைக்கழகம் ஆகிய முப்பெரும் வல்லரசு நாடுகளின் பல்கலைக்கழகங்களிலே கல்வி பயின்று சொல்லறியா பட்டங்கள் பெற்று, தன்னுரிமை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அரும்பணியாற்றிய ஆற்றல்மிக்கோன் அறிவின் களஞ்சியம்,கல்விக்கடல்
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் என்னைவிட எந்நாடு பெரியது,என் நாட்டைவிட எனது சமுதாயம் பெரியது என்ற பொன்மொழியை,புதுமை புனலாக புரட்சிக்கனலாக ஆர்பரிக்கும் அலைக்கடலாக, மேடைதோறும்
முழங்குவதையே தனது பேச்சாகவும் உயிர் மூச்சாகவும் கொண்டு செயல்பட்டவர் கோடையிடி கே.பெருமாள்.
பெண்கள் நாட்டின் கண்கள்
தாய்குலத்தை நாயினும் கீழாக நடத்தப்பட்டதை கண்டு உள்ளம் வெதும்பி, மனம் பொறுமி, நெஞ்சம் துடித்து, இதயம் கொந்தளித்து, இதற்கோர் விடிவும் முடிவும் கண்டிட முனைந்தார் பர்.அம்பேத்கர்.
ஆசியாவின் ஒளிச்சுடர், பஞ்சசீல பாதுகாவலர், அமைதி புறா, பதினேழு
ஆண்டுகால முடிசூடா மன்னராக இந்திய தலைமை அமைச்சராக திகழ்ந்திட்ட மிக பெரிய சீர்த்திருத்தவாதி என பாரெல்லாம் புகழ்ந்திட்ட
பண்டிதர் ஜவஹர்லால் நேரு பெருமானிடம் இந்து அற சட்டவரைவு(Hindu Court Bill) பற்றி விளக்கமோடு விவாதித்தார்.பண்டிதர் நேரு அவர்களும் ஆதரித்து ஆமோதித்தார்.
பாராளுமன்றம்
இந்து சீர்த்திருத்த சட்டவரைவை பர்.அம்பேத்கர் பாராளும் மன்றத்தில் கொண்டுவந்தார்கள். ஐதீக அடிவருடிகளால், அஞ்ஞான பித்தர்களால்,பழமை பஞ்சாங்க எத்தர்களால்,வருணாசிரம் வெறியர்களால்
பார்புகழ்மேவும் சீர்மிகு செம்மலர் சட்டம் நேர்மையற்று தோற்கடிக்கப்பட்டது

நேர்மைக்கு நிராகரிப்பு , கருத்துக்கு கதவடைப்பு , பழம்போர்வைக்கு பொன்விழா,அறியாமைக்கு அரியாசனம்,சிந்தனைக்கு சிறைவாசம்,
சீரிளமை பெண்மைக்கு வனவாசம்
மாநாடுகள் கண்ட மாவீரன்

சொல்லுதல் யாருக்கும் எளிய அறியவாம்
சொல்லியவண்ணம் செயல்(இரையனார் குறள்)

பதவி என்றாலே அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளும் குட்டைச்செயலை வெட்டி வீழ்த்திய சட்டவித்தகர்.தாய்குல விடுதலைக்காக தான்வகித்த மைய அரசு அமைச்சர் பதவியை பர்.அம்பேத்கர் துறந்தார்கள்.
இந்தியாவின் இலட்சியவாதிகள்,புத்துலக சிற்பிகள்,மறுமலர்ச்சியாளர்கள்,
சமுதாய சிந்தனையாளர்கள்,சீர்த்திருத்தவாதிகள் அனைவரும் தலைவர் கே.பெருமாள் உட்பட வாழ்த்தி வணங்கி வரவேற்றார்கள்.
கர்நாடக மாநிலம் தங்கவயல் குடியரசுக் கட்சியின் வாயிலாக,
தியாகச்செம்மல் அம்பேத்கர் உணர்வுகளை ஆதரித்து நாவேதர் கே.பெருமாள் மேடைதோறும் இடிமுழக்கமிட்டதோடு சழுக்கர் செயலுக்கு சவுக்கடி கொடுத்திட, சவக்குழித் தோண்டிட பாரதம் முழுதும் பவனிவரும் பாபா சாகேபை அவனிப்போற்றும் அம்பேத்கரை, பகுத்தறி பகலவனை, பொன்வளர் ஞாலத்திற்கு தங்கத்தரணிக்கு அழைத்திடவும்,
அறங்கு அமைத்திடவும், அறியாமை அகன்றிடவும், மாமேதை முழங்கிடவும், இலட்சோபலட்சம் மக்களை திரட்டியும்,திக்கற்றவர்களை
திசை தெரிந்திடவும், தெளிவுப்பெற்றிடவும், சமுத்துவத்தை பெண்கள் கற்றிடவும்,ஆட்சிக்கோட்டையிலே குடிக்கொண்டோர் உணர்ந்திடவும்
உழைத்தார் உழைத்தார் கடுமையாக உழைத்தார் கே.பெருமாள்,உள்ளவுறுதியோடு,உண்மை உணர்வோடு, உணர்ச்சிப்பெருக்கோடு .
அண்ணல் அம்பேத்கர் அடிச்சுவட்டை பின்பற்றி அணிவகுத்தவர்கள் துணொவுமிக்க பணிப்புரிந்தவர்கள்,சமுதாயம் களங்கண்டவர்கள் பலர்
தலைவர் கே.பெருமாள் அவர்களிடம் நட்பு கொண்டவர்கள்.ஆம் பழங்குடி
மக்களின் பாதுகாவலர்களின் பெயற்பத்தியல் பாரீர்!புகழ்தனை கேளீர்!!.
சட்டப்பேராசிரியர் இரவ்பகதூர் என்.சிவராஜ் BA.BL .MP சென்னை நகர
தந்தையாக, குடியரசு கட்சியின் தலைவராக இருந்தவர்.தாதாசாகேப்
B.R.கெய்க்வாட் M.P. இங்கிலாந்து நாட்டில் வழக்குரைஞர் பட்டம் பெற்று,
அனைத்திந்திய செயலாளராகவும் அரசவை(ராஜ்ஜிய சபா) துணைதலைவராகவும் விளங்கிய பாரிஸ்ட்டர் கோபர்கடே M.P. ,கட்டிபாபு M.A.L.L.B., B.C.காம்ளே M.P.,N.M.காம்ளே, P.B.மேஷ்ராம் நாக்பூர் நகரசபை மேயர். பொருளாளர் கும்பாரெ,R.D.பண்டாரே M.P.,ஆந்திர ஆளுநர்
உரிமைக்குரல் பத்திரிகை ஆசிரியர் தமிழ்நாடு S.R.முனிசாமி M.L.A.
சீர்காழி K.B.S.மணி M.L.A. மற்றும் M.P.ஈஸ்வரிபாய் M.L.A.,ஆந்திர தளபதி
ராஜ்போஸ்,பூனா ஐ.சிவலிங்கம்,வாடப்பிள்ளை M.R.A, G.K.மானே M.P.
இலங்கை புத்தமார்க்க தலைவர் தெறாங்னனா,S.R.முனிசாமி M.L.A.


பொருளாதாரத்தால் முடக்கப்பட்டு,பொல்லா சாதியக்கொடுமையால் அடக்கப்பட்டு அரசியல் தகுதித்தன்மையிலும் ஒடுக்கப்பட்டு உரிமை இழந்த மனிதக்குலம் ஒன்று இருந்தது என்றால் அது ஆதி திராவிடர் இனம்தான்.
வாயிருந்தும் வார்த்தைகள் பேச வராது, தொட்டாலே தீட்டு என்பது மட்டும் அல்லாது பார்த்தாலே பாபம் என்ற பரிதாபத்திற்குறிய
ஒரு பரம்பரை இருந்ததென்றால் அது பழங்குடி பரம்பரைதான்.
அதனால்தான் பத்து ஆண்டு காலம் மூக் நாயக்(ஊமைகளின் தலைவன்) பத்திரிகை நடத்தினார்கள் நமது நவயுக நாயகன் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். பகிஷ்கர் பாரத் பத்து ஆண்டுகள் நடத்தினார். ஜனதா
தலைப்பில் பத்தாண்டுகள் நடத்தினார்.
06.12.1956 பாபா ஸாகிப் பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்தார்கள்.
ஆதியர் வாழ்வில் இந்தியாவே இருண்ட கண்டமாகிவிட்டது. வறண்ட பூமியாக மாறியது.
இப்படி ஒரு இக்கட்டான, நெருக்கடியான நேரத்தில்தான் தலைவர் கே.பெருமாள் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநாட்டைஒ சாந்தமூர்த்தி பி.எம்.சுவாமிதுரை எர்மலை ஜுவாலை ஜே,சி.ஆதிமூலம் , எம்.தனகோபால் ,டாக்டர் ஏ.வி.எம்.சாமி, ஜெய்பீம் சிகாமணி ஆகியோரொத்துழைப்போடு பெரும்பணி ஆற்றினார்கள்.
தங்கச் சுரங்கத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும்
பாட்டாளி தோழர்கட்குஇரத்த தானம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

Montag, 10. November 2008

நாக நாடு எனும் நாவந்தீவினிலே

நம்பிக்கை நாணயம் நன்னெறி


வாழியே நின் திருநாமம்

நாக நாடு எனும் நாவந்தீவினிலே
நானிலம் புகழும் மகாராட்டிரத்தில்
நலன்கள் பலப்பெற்று நலமுடன்
நன்மக்களாய் புகழுடன் வாழ்ந்த
சக்பால் ராம்ஜி பீம்பாய் வழிதோன்றல்
வான்புகழ் கொண்ட வல்லவனே
வையத்தில் வன்முறையே எங்கள் கொள்கை
என முழங்கி கொன்று குவிக்கும் கோரபற்களிடையே
வாடும் நின்குலமக்கள் வாட்டத்தைப்போக்க
வந்துதித்த வான்மதியே !
வந்துதித்த நாள்முதல் வறுமைக்கோலம் பூண்டு
வைராக்கியமுடன் கல்வி பல பெற்று
வான்புகழ் கொண்ட வள்ளலே
வளமார் நின்மக்கள் சரிநிகர் சமமாக வாழ
சட்டம் பலதீட்டிய வரலாற்று நாயகனே
வேலியே பயிரை மேய்வதே போல்
வேரிலே தோன்றும் புழுபோல பிறந்த
குலத்தையே அடகு வைத்து
கோடி கோடியாய் பணந்தனை சேர்த்தே
கொடியவர்கள் பலர்குபேர சம்பத்துடன்
வாழ்கின்றார் மான வுணர்ச்சியின்றி
அக்குல கேடுகள் பல அலறுகின்றன அவனியிலே
அண்ணலின் பேரைச்சொல்லி
அந்நல்லவர்களையும் சேர்த்து
வைரவிழா,மரகத விழா கொண்டாடும்
நின் பிறந்த நாளான ஏப்ரல் பதினாளிலே
புத்தனின் புனித வழி ஏற்ற அண்ணலே அம்பேத்கரே
அறிவுக்களஞ்சியமே அருள்வாய் எமக்கே நல்லறிவு
நும் அடியினை போற்றுகிறோம் அனைவரும்
நலம் பல பெற்று நானிலத்தில் வாழ
வாழியே நின்திரு நாமம் என்றும் வாழியே
வையகம் உள்ளளவும் வாழியவே

ஆக்கியோன் தங்கவயல் கு.பெருமாள்

Samstag, 25. Oktober 2008

- இதுவும் ஒரு கருப்பு சூலைதான்

கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி -
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி - இதுவும் ஒரு கருப்பு சூலைதான்சரவண இராசேந்திரன்சூலை 26, 2008
கோலாரில் தங்கம் என்றதும் நம் நினைவிற்கு வருவது, தமிழர்கள் தாம், ஆம் இந்தியாவின் மிகபெரிய தங்கவயல் தங்கம் எடுக்க பல இன்னல்கள் பட்டு எடுத்தது தங்கமாக இருந்தாலும் அவர்களின் வாழ்வு தகரமாகவே இருக்கிறது. இதோ இன்று பல சுரங்கங்கள் அடைக்கபட்டு விட்டன. அங்கு வாழ்வாதரமாக குடியேறிய தமிழர்கள். இன்று கூலி வேலை செய்து பிழைக்கும் சூழல், இந்த தியாகிகளின் உண்மையில் பாராட்டுக்குறியவர்கள்.
கர்னாடக அரசாங்கம் இவர்கள் தமிழர் என்பதற்காகவே இவர்களுக்கான எந்த சலுகைகளிலும் முனைப்பு காண்பது இல்லை , அங்கு உள்ள ஒரே ஆ தி மூ க மேலவை உறுப்பினரோ தேர்தல் சமயத்தில் மட்டும் தான் வெளியில் தலைகாட்டுவார்.
தற்போது மாநகராட்சி உறுப்பினர்கள் கூட தாங்கள் இதை செய்தோம் இன்னதை செய்ய போகிறோம். என புத்தகமிட்டு வழங்கி வருகின்றனர். ஆனால் இவருக்கு என்ன செய்தார் என்று புத்தகமிட்டால் அது வெள்ளை பக்கங்களாகத்தான் வரும்.
மாநாட்டின் குரல் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்தின் காதுவளை கிழிய ஒலிக்கட்டும்.ஆனாலும் இதிலும் சில அரசியல் பச்சோந்திகள் குளிர் காயாமல் பார்த்துகொள்வது மாநாட்டை நடத்தும் தமிழுணர்வாளர்களின் கடமை
"போடுர இடத்தில் போட்டால் பாறைகூட தவிடு பொடியாகிவிடும்"
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி - இதுவும் ஒரு கருப்பு சூலைதான்- பாரத் வெள்ளைச்சாமி -சூலை 26 , 2008
கோலாரில் தமிழ் தியாகிகள் நினைவு எழுச்சிப் பேரணி பெங்களூர்: தாய் தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் போராடி உயிர் நீத்த தமிழர்களின் நினைவாக, கோலார் தங்க வயலில் ஞாயிற்றுக் கிழமை எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.இது தொடர்பாக கர்நாடக மாநில தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராஜன், பொதுச் செயலாளர் ஆரோக்கிய நாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடகத்தில் மொழிக் கொள்கை, கன்னடர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் கோகாக் குழுவின் பரிந்துரைகளை அப்போது முதல்வராக இருந்த மறைந்த குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசு 1982-ம் ஆண்டு அமல்படுத்தியது.இதனால் மொழிச் சிறுபான்மையினருக்குத் தாய்மொழி கல்வி உரிமையைப் பறிக்க அப்போதைய அரசு முயன்றது. இதை எதிர்த்து தமிழில் கல்வி கற்க உரிமை கோரி கர்நாடகத்தில் சிறுபான்மைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் தங்க வயலில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக நடந்தது. அறவழியில் நடந்த இந்தப் போராட்டத்தை காவல்துறை அத்து மீறி அடக்க முயன்றது. போராட்டம் நடத்திய தமிழர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.காவல் துறையின் இந்த அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடினர். இதனால் குண்டுராவ் அரசு தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டத்தை அடக்க உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து தங்கவயலில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பால்ராஜ், உதயகுமார், மோகன், பரமேஸ்வரன் ஆகியோர் குண்டுபாய்ந்து இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட பலர் இன்று வரை வீடு திரும்பவில்லை. அவ்வாறு காணாமல் போனவர்கள் மட்டும் 15 பேர்.தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நடந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27-ம் தேதி எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு எழுச்சி நாள் பேரணி மற்றும் எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தங்க வயலில் நடைபெறுகிறது.பேரணி காலை 10 மணிக்கும், மாநாடு பகல் 12.30 மணிக்கும் நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றிதட்ஸ்தமிழ் மின்னிதழ்
கோலார் தங்கவயல் தமிழ் ஈக மறவர்களைக் குறித்து இத்தளத்தில்(yahoo groups) இணைத்தமைக்கு
மிக்க நன்றி.இந்தியாவில் எப்படி தமிழகம் ஒரு தீவாகவுள்ளதோ அதே போல் கருநாடக மாநிலத்தில்
கோலார் தங்கவயல் ஒரு தீவாகும்.
என் இளமைக் காலத்தில் தொடக்கப் பள்ளியில் தமிழ் பாடமொழியாக இருந்தது.ஆனால் இன்று யாம்
பயின்ற் அந்த பள்ளிக்கூடம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.ஏனைய
பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமொழியாக இல்லை.எல்லாம் கன்னடமையமாகிவிட்டது.
தமிழ் பெயரைச் சூட்டிக்கொள்ளக்கூட அச்சப்படுகிறார்கள்.கோகாக் எனும் கன்னட பிராமணரைத்
தலைவராகக் கொண்ட ஆய்வுக் குழு தமிழ்க் கல்விக்கு கேட்டை உண்டாக்கிவிட்டது. அதனை
எதிர்த்து தமிழ்மொழிக் காக்கும் போராட்டத்தில் கி.பி.1982 சூலை திங்கள் 5,6,7ம் பக்கலில் கருநாடகக்
காவல் துறையால் நான்கு தமிழ் மறவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.தங்கவயலில் அண்ணல்
அம்பேட்கரின் அகில இந்தியக் குடியரசு கட்சியை பெருபாண்மைக் கொண்ட இடமாகும்.சட்டமன்ற
உறுப்பினர் அக்கட்சியைச் சேர்ந்தராக இருப்பார். இந்த நான்கு தமிழ் மறவர்களின் ஈகத்தைக்
கேள்விப் பட்டு சந்தர்ப்பவாத தன்னலப் பேர்வழியான நடிகர் மா.கோ.இரா.(MGR) மகர்றையாக
தங்கவயல் வந்து இறந்தவர் குடும்பத்திற்க்கு உரூ.40,000 வழங்கினார்.அதனைக் கண்ட
தங்கவயல் மக்கள் முதன்முறயாக அ.தி.மு.க. உருவாகி தேர்தலில் வெற்றியும் பெற்றுவுட்டது.ஆனால்
ஈழத் தமிழர்களைவிட கருநாடக அரசினால் தங்கவயல் தமிழர்கள் புறக்கனிப்பிற்கு ஆளானார்கள்,அதன் தொடர்ச்சியாக தங்கச்சுரங்கங்கள் அனைத்தும் (போதுமான தங்கம் இருந்தும்)மூடப்பட்டுவிட்டன.தங்கவயல் தங்கச்சுரங்க்கள் மூடப்படும் என்று 60 களில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த என் தந்தையார் கே.பெருமாள்
தலைமையில் தண்டவாளாத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தி தமிழர்களின் எதிர்காலம் சிறக்க பஞ்சாப் மாநிலத்திற்கு போகயிருந்த மண்வாரி இயந்திரத தொழிற்சாலை தங்கவயலில்அமைய காரணமானார்கள்.
ஆனால் தங்கவயல் தமிழர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டது கன்னட அரசு. . இத்தமிழர்களுக்கு தமிழகமாகட்டும் அல்லது நடுவன் அரசாகட்டும் எவரும் பல அறவழி போராட்டங்கள் நடத்தியும் தங்கவயல் தமிழர்களை எவரும் கண்டுக்கொள்வதில்லை. தமிழர்களை அந்த ஊரைவிட்டே விரட்டுவதுதான் கருநாடக அரசின் திட்டம்.அல்லலுக்கும் அவதிக்கும் உள்ளாகியுள்ள தங்கவயல் தமிழர்கள் குறித்து தொடர்ச்சியாக
thamizhankural. org எனும் இணையதளத்தில் என் இடுகையைக் காணலாம்
தங்கவயல் தமிழன்
ஆ.பெ.மணியரசன்செருமனி

Donnerstag, 9. Oktober 2008

தங்கவயல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுச் சிறப்பு வெளியீடு

வாழ்வுரிமை
குணா
ஓர் இனமோ மக்கள் பிரிவோ அமைதியாக வாழ்ந்து தனித்து வளம்பெற இயலாத வகையில் , ஒடுக்கப்படவும் அடக்கப்படவும் நேர்கின்ற சூழலில் தான் வாழ்வுரிமை
என்ற பேச்சே எழுகிறது. மொத்தமாகவோ சில்லரையாகவோ அவர்களின் வாழ்வியல் உரிமைகள் பறிக்கப்படவோ மறுக்கப்படவோ நேர்கின்ற போதுதான் , " எங்களுக்கு
இந்த மண்ணில் வாழ உரிமை உண்டு " என்னும் உள்ளக்குமுறல் ஒடுக்குண்ட மக்களிடமிருந்து எழுகிறது. எனவே , மாந்தவுரிமை அல்லது பொதுவியல்(civil) உரிமை என்றெல்லாம் சொல்லப்படும் மக்களுரிமைக்கான மறுப்பெயர்தான் வாழ்வுரிமை . மாந்தவுரிமையோ பொதுவியல் உரிமையோ பொதுவாகத் தனியாள் மட்டத்திற்கான உரிமையைக் குறிக்கும் . ஆனால் , வ்வாழ்வுரிமை என்ப்து ஓர் இனத்தின் அல்லது மக்கள் பிரிவின் ஒட்டுமொத்த உரிமையைப் பற்றியது . ஆகவே , வாழ்வுரிமை மறுப்பு என்பது மிகவும் கொடுமையானது ; ஒட்டுமொத்ததில் சந்தடியில்லாத இனவொழிப்புக்கு ( genocide ) ஈடானது .
இந்தப் பின்னனில்தான் கருநாடகத் தமிழரின் வாழ்வுரிமை மாநாடு நடைப் பெறுகிறது .

மண்ணைப் பறித்தானே !
கன்னடச் சளுவளி இயக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்னர் எழுந்த்போது , தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதையே – தமிழர்களை மட்டுமே தன் தாக்குதல் குறியாகக் கொள்வதையே - அது தன் னுடைய நோக்கமாகக் கொண்டிருந்தது . பெங்களூர் . கோலார் , மைசூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் , துமுக்கூர் , மாண்டியம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகளும் திகிழர் எனக் கன்னடரால் அழைக்கப்பட்ட பழந்தமிழர்கள் வழ்வ்ழியாக வாழ்ந்துவந்த மண்ணாகும் . இத்திகிழர்கள் போக, ஆங்கிலேயர் ஆட்சியில் பெங்களூரின் தண்டுப்பகுத்யிலும் கோலார் தங்கவயலிலும் குடியேறிய தமிழர்கள், இங்கு ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் . கொங்குநாட்டிலிருந்து பழைய மைசூர்ப் பகுதியைப் பிரித்த வடுகப் படையெடுப்பாளர்கள் , அதைத் தனிநாடாக ஆக்கினர் . அதை அவர்கள் கங்கநாடு என்றனர் . இந்தக் கங்கநாட்டில் , தமிழர்களும் தமிழ்ப் பண்பாடுமே மேலோங்கி இருந்ததை வரலாறு காட்டும் .

இந் நிலையில், மொழிவழி மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டில் அமைந்த பிறகு தோன்றிய அகன்ற கருநாடகத்தின் தலைநகராகப் பெங்களூர் ஆனது. இந்தப் பெங்களூரோ. தமிழர்கள் வழிவழியாக வாழ்ந்துவந்த மண்ணாக இருந்தது. இதனால் , இப் பகுதியை அரக்கப் பறக்கக் கன்னடமயமாக்குவது என்னும் போக்கும் நோக்கும் அரசியல் வடிவம் பெற்றது.அதன் விளைவே கன்னடச் சளுவளி இயக்கமாகும்.
மண்ணை இழந்தவுடன் ஓர் இனத்து மக்களிடமிருந்து முதலில் பறிக்க்ப்படுவது அவர்கள் தங்களின் தாய்மொழியைக் கற்கும் உரிமையே ஆகும் . அரசு அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் அவர்களுக்குள்ள வேலைவாய்ப்புகளைக் குறைப்பது அடுத்த வேலை . பெங்களூரிலும் இதுவே நடந்த்து . ஆனால், இங்கு நடந்தவற்றிற்கு ஒரு தனிப்போக்கு உண்டு. பெங்களூர் நகரத்தின் சுற்றுமுற்றும் இருந்த நிலபுலங்கள் யாவும் திகழர்களிடம் இருந்தன. இத் தலைநகரம் மளளவென வளர்கையில். புதுப்புதுப் பகுதிகளை உருவாக்க வேண்டுமாயின், இத் திகிழரிடமிருந்த நிலங்களைப் பறித்தாக வேண்டும். பெங்களூர் மேம்பாட்டு வாரியத்தை(Bangalore Devolopment Authority) அமைப்பது என்னும் சாக்கில் பழந்தமிழரான அத்திகிழர்களின் நிலங்களெல்லாம் கருநாடக அரசால் உரிய இழப்பீடு இன்றிக் கையக்ப்படுத்தப்பட்டது.
இப்பகுதியில் வந்தேறிய தெலுங்கு இரெட்டிகள், திகிழர்களின் கல்லாமையையும் பேதமையையும் கண்டு அவர்களை ஏமாற்றிச் சுற்றும்முற்றுள்ள நிலங்களை எல்லாம் இன்னொரு பக்கம் மெல்லக் கையகப்படுத்தி வந்தனர். எழுபதுகளில் பூதமென எழுந்த கன்னடச் சளுவளி இயக்கம், இந்த இரெட்டிகளுக்குத் தோள்கொடுத்தது.
இந்த்க் கன்னடச் சளுவளி இயக்கத்தின் மூளை, தெலுங்குப் பார்ப்பனர்கள். அதற்குப் பணத்தால் ஊட்டம் தந்தது தெலுங்கரான கோமூட்டிச் செட்டிகள். அதன் அடிதடி அதிரடிப்படையாகத் தெலுங்கு இரெட்டிகள் இருந்தனர். இவ்வாறு தமிழர்களை ஓரங்கட்டவும் – தமிழர் இனத்தை ஒழித்துக்கட்டவும் – மூளையாகவும் முட்டியாகவும் இருந்தவர்கள் தெலுங்கரே ஆவர். ஆனால், இன்று இனவெறி கன்னடர் எல்லாரிடமும் புரையோடிய ஓர் மனநோயாகிவிட்டது.
-வளரும் -

Montag, 25. Februar 2008

குமுகாய விடிவெள்ளி கு.பெருமாள்

இரங்கற் பா
இன்னுமென்ன உ ற க் க ம்!

விடிந்தது காரிருளும்
விழித்திடாயோ சீரப்பா..,
கடிந்தது யான் என்னவோ
கலங்கும் எம்மை இமைதிறந்து பாரப்பா..!
முடிந்தது நீ சென்ற பாதை - ஒரு
நொடியில் நீ பிரிந்தாய் உலகை
துடித்தது பலவுயிர் அதை தேற்ற
படித்தமேதையே இதை விழித்துபாராயோ..!

ஒடித்திரியுங்காற்றில் நீவரவே
கூடினோம் நாங்கள் கருமம்செய்ய
பாடினோம் நின்றன் திருபெயரையே
வாடினோம் இளங்காற்றாய் நீ வீசு..!

தேடினோம் உனைக் காணாததால்
வாடினோற்கு தர்ம உண்டியிட்டு
ஏணி போடுகிறேன் இறங்கி வந்து விடு
அப்பா...! அப்பா..! அப்பா..!


குறிப்பு:
சீரப்பா - புகழ்கொண்ட அப்பா 01.06.1983

Sonntag, 24. Februar 2008


கோலார் தங்கவயல் தமிழர்கள்

கோலார் என்கிற பெயர்ச்சொல் ஒரு காலத்தில் அதாவது கொங்கு மண்டலத்தின் பகுதியாக இருந்த காலத்தில் குவாலப்புரம் என்று அழைக்கபட்டது என்றும் ,அதே போல் இன்று மைசூர் என்று விளிக்கப்படுகின்ற ஊர் பெயர் கொங்கு மண்டல ஆட்சியில் எருமையூர் என்று அழைக்கப்பட்டதாக மொழி ஞாயிறு தேவநேயப்
பாவாணர் கூறுகின்றார்.ஆக எருமையூர்(மைசூர்), வெங்காலூரின்(பெங்களூர்) பெரும்பகுதி,குவாலப்புரம்(கோலார்) மற்றும் காவிரியின் பிறப்பிடமான குடகுமலை வரையும் மேலும் வடவேங்கடம்(திருப்பதி) தென்குமரி என்பது தொன்றுத்தொட்டு தமிழகத்தின் எல்லைக்குள் இருந்தது. இந்த பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தாலும், வடுகத்திரவிடத்தலைவர்களின் (ஈ.வே.இரா., சி.என்.அண்ணாதுரை,மு.கருணாநிதி இன்னப்பிற திராவிடக்கழகத்தோழர்கள்) மாற்று அரசியல்போக்கு,
பச்சைத்தமிழரான காமராஜரின் தேசியக்கொள்கையினால் தமிழக நிலப்பரப்பினை மீட்டெடுக்காமல் முடியாமல்
போய்விட்டது.மா.பொ.சியார் முயற்சித்திருக்காவிட்டால் சென்னை,திருத்தனி,ஒசூர்,கிருஷ்ணகிரி ஆகிய
பகுதிகளும் தவறவிட்டிருப்போம்.தன் தமிழக நிலப்பரப்பு மீட்புக்கு திராவிடக்கழகத்தார்,திமுக ,காமராஜர்,இராஜாஜி போன்ற தேசியத்தலைவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் தமிழகத்து பல முகாமையானப்பகுதிகளை மீட்டிருப்பேன் என்று மா.பொ.சி.
அவர்கள் கூறியுள்ளமை நினைவுக் கூறத்தகுந்தது. திருப்பதி,சித்தூர்,குப்பம்(இவை ஆந்திரர் கவர்ந்துக் கொண்டனர்),குமரி மாவட்டத்தில் பல பகுதிகள் எடுத்துக்காட்டிற்கு கண்ணகிக்கோயில்(இன்றுவரை இது தமிழக எல்லைக்குள் இருக்கின்றதாக சொல்லப்படுகின்றது.),பீர்மேடு இன்னப்பிற பகுதிகள் ஆகியவை கேரளர்கள் கவர்ந்துக்கொண்டனர்.கோலார் தங்கவயல், குடகு,பெங்களூர் தண்டுப்பகுதிகள் இன்னப்பிற பகுதிகள் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் கருநாடக மாநிலத்திற்கு போய்விட்டதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகள் தொடர்ந்து தமிழகத்தின் எல்லைக்குள் இல்லாமல் போய்விட்டது.அதனால் இன்று தமிழர்களுக்கு எத்தனை இடையூறுகள்.அதை இன்று கண்க்கூடாக பார்க்கிறோம். ஆனால்
தமிழர்கள் ஏனைய மொழியினத்தவர் விழிப்புடன் இருப்பது போல்
விழிப்பில்லாமலும் அறியாமை என்னும் மடமையில் மூழ்கி சூடு சுரணையற்றப் பிண்டங்களாக நமக்கென்ன வந்தது என்று எருமை
மீது மழைப் பொழிந்தது போல் வந்தாரை வாழவிட்டு தன் தொடையில் கயிறுத்திரித்துக்கொள்ளவும் விட்டிருக்கின்றான் .
மத மூடநம்பிக்கை , திரைப்படத்துறையினைரை தலையில் தூக்கிவைத்து ஆடுவது ஆகிய அறியாமையிலிருந்து விடுப்பட்டால்தான் இவண் வாழ்வு மேம்படும்.
தொடரும்.....